search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வர்த்தக ஒப்பந்தம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவுக்கு வருகை தர உள்ள இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக், வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • 29-ந்தேதி லக்னோவில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ரிஷிசுனக் நேரில் சென்று பார்க்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் இம்மாத இறுதியில் இந்தியாவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் வருகிற 28-ந்தேதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இந்தியா-இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணிகள் நடந்து வரும் நிலையில் பிரதமர் ரிஷிசுனக் இந்தியா வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இது குறித்து அரசு வட்டாரங்கள் கூறும்போது, வர்த்தக ஒப்பந்தத்தில் உள்ள 26 அத்தியாயங்களில் 24 அத்தியாயங்களை இரு தரப்பும் இறுதி செய்துவிட்டன. சில விஷயங்களில் உள்ள வேறுபாடுகளை களைவதன் மூலம் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இரு தரப்பினரும் தீவிரமாக உள்ளனர்.

    இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் இந்திய பயணத்தில் இரு நாடுகள் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றனர்.

    மேலும் 29-ந்தேதி லக்னோவில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ரிஷிசுனக் நேரில் சென்று பார்க்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்தியாவுக்கு வருகை தர உள்ள இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக், வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த மாதம் இந்தியாவில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கலந்து கொண்டார். இதில் அவர் இந்திய பிரதமர் மோடியுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நான்கு மாதங்களுக்கு முன்பு இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தன.
    • காலிஸ்தான் விவகாரத்தில் கனடாவுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    ஒட்டாவா:

    கனடா வர்த்தகத்துறை மந்திரி மேரி எங், அடுத்த மாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். அவரது இந்த பயணத்தில் இந்தியாவுக்கான வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் கனடா மந்திரி மேரி எங்கின் இந்தியா பயணம் திடீரென்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மந்திரியின் செய்தி தொடர்பாளர் சாந்தி கோசென்டினோ கூறும்போது, "இந்தியாவுக்கு வரவிருக்கும் வர்த்தக பணியை நாங்கள் ஒத்தி வைக்கிறோம்" என்றார். ஆனால் ஒத்தி வைப்பதற்கான காரணம் குறித்து அவர் தெரிவிக்கவில்லை.

    நான்கு மாதங்களுக்கு முன்பு இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தன. இதற்காக கனடா மந்திரி இந்தியாவுக்கு வர இருந்த அந்த பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 9, 10-ந்தேதிகளில் இந்தியாவில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டார். இதில் இந்திய பிரதமர் மோடி-ஜஸ்டின் ட்ரூடோ இடையே இரு தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

    அப்போது கனடாவில் இந்தியாவுக்கு எதிரான காலிஸ்தான் அமைப்புகளின் நடவடிக்கைகள், இந்து கோவில் மீது தாக்குதல், இந்திய தூதரகங்களுக்கு மிரட்டல் ஆகியவை மீது கனடா அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ட்ரூடோவிடம் மோடி வலியுறுத்தினார்.

    மேலும் காலிஸ்தான் விவகாரத்தில் கனடாவுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    ஜி-20 மாநாடு முடிந்த பிறகு விமான கோளாறு காரணமாக ஜஸ்டின் ட்ரூடோ, கனடா புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. அவர் இரண்டு நாட்கள் கழித்து புறப்பட்டு சென்றார்.

    ஜஸ்டின் ட்ரூடோ ஜி-20 மாநாட்டின் 2-வது நாள் அமர்வில் பங்கேற்கவில்லை. இதனால் அவர் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில்தான் கனடா வர்த்தக மந்திரியின் இந்தியா பயணம் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் இரு நாட்டின் இடையேயான நட்புறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. மேலும் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதில் சிக்கல் உண்டாகி இருக்கிறது.

    • பேச்சுவார்த்தையை துவங்குவது பற்றி பின்னர் முடிவு எடுக்கப்படும்.
    • ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்.

    இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொள்வதாக கனடா அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. கனடா நாட்டின் இந்த திடீர் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்து இருக்கிறது.

    வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை துவங்குவது பற்றி இரு நாடுகள் சார்பிலும் பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொள்வதாக கனடா தரப்பில் இருந்தே அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

     

    திடீரென பேச்சுவார்த்தை நிறுத்திக் கொள்வது பற்றி வேறு எந்த தகவலும் வழங்கப்படவில்லை. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அடுத்த வாரம் இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வர இருப்பதை ஒட்டி, இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பாக இந்தியா மற்றும் கனடா இடையே கிட்டத்தட்ட ஆறு முறைக்கும் அதிகமாக பேச்சுவார்த்தை நடைபெற்று இருக்கிறது. 

    • கப்பலூர் தொழிலதிபர்கள் சங்கத்தினர் மலேசியா பயணம் செல்கின்றனர்.
    • ரூ.50 கோடி வர்த்தக ஒப்பந்தம் நடக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் தொழில் பேட்டை சங்கத்தினர் 3 நாள் பயணமாக மலேசியா செல்கின்றனர். கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள இண்டஸ்ட்ரியல், பிளாஸ்டிக், சித்தா, பேப்பர், என்ஜினியரிங் ஆகிய 5 தொழில்துறை சார்பில் தொழில்களை பெருக்கு வதற்காகவும், தொழில் முன்னேற்றம் அடைவ தற்காகவும் மலேசிய தூதரகம் வர்த்தக பிரிவு வான் அகமத் தர்மேஷ் இடிஸ் ஏற்பாட்டில் 15 பேர் கொண்ட குழு இந்தியாவில் இருந்து மலேசியா செல்ல உள்ளனர்.

    இதுகுறித்து கப்பலூர் தொழிற்பேட்டை தொழிலதிபர் சங்கத் தலைவர் ரகுநாத ராஜா, நிருபர்களிடம் கூறியதாவது:-

    கப்பலூர் தொழிலதிபர் சங்கத்தின் சார்பாக 15 பேர் கொண்ட குழு மலேசியா வர்த்தகத்துடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்காக நாளை செல்கிறோம். கப்பலூர் தொழிற்பேட்டை அடுத்த கட்ட தொழில் வளர்ச்சி முன்னேற்றத்திற்காக இதனை கருதுகிறோம். மலேசியா பயணம் ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் வர்த்தகம் நடப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. மலேசியாவில் உள்ள வர்த்தகத்துடன் 25 பேர் கொண்ட குழு சேர்ந்து நாங்களும் வர்த்தக கருத்தரங்கில் பங்கேற்க உள்ளோம்.

    மலேசியாவில் உற்பத்தி யாகும் பொருட்களை கோலாலம்பூரில் மலேசிய அரசு கண்காட்சி வைத்துள் ளது. அதனை பார்வையிட செல்கிறோம். மலேசியா பயணம் கப்பலூர் தொழில் பேட்டையை விரிவுபடுத்த உபயோகப்படும் என நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செயற்கை நூலிழை துணிகள் மற்றும் ஆடைகள் உற்பத்திக்காக பல்வேறு சலுகைகளை அரசு வழங்கியுள்ளது.
    • ஆயத்த ஆடை மேம்பாட்டு கவுன்சில் சார்பில் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

    அவிநாசி :

    திருப்பூரில் ஏற்றுமதி வர்த்தகத்தில் இளம் ஏற்றுமதியாளர்களை ஊக்குவித்து வர்த்தக வாய்ப்புகளை அதிகம் ஈர்க்கும் வகையில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இளம் ஏற்றுமதியாளர் துணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.

    இதன் முதல் சந்திப்பு கூட்டத்தில் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தென்மண்டல பொறுப்பாளர் சக்திவேல் பேசியதாவது:- செயற்கை நூலிழை ஆடை உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியிருக்கிறது. இதுதொடர்பாக ஆயத்த ஆடை மேம்பாட்டு கவுன்சில் சார்பில் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

    அதில் உலகளாவிய தேவை மற்றும் வாய்ப்புகள் குறித்து அறிந்து அரசின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. செயற்கை நூலிழை துணிகள் மற்றும் ஆடைகள் உற்பத்திக்காக பல்வேறு சலுகைகளை அரசு வழங்கியுள்ளது.

    அத்திட்டத்தின் இரண்டாம் பகுதி ஓரிரு மாதங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் சிறு, குறு உற்பத்தியாளர்களும் பயன் பெறுவர். ஏற்கனவே ஆஸ்திரேலியாவுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்த சூழலில் அடுத்த சில மாதங்களில் கனடா மற்றும் பிரிட்டன் நாட்டுடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்தாகும்.

    இதன் மூலம் வர்த்தகம் நிச்சயம் பல மடங்கு அதிகரிக்கும். அதற்கேற்ப நாம் நம்மை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இந்திய நுகர்வோருக்கு தரமான பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கும்.
    • ஒரு லட்சத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்களில் சேர வாய்ப்பு.

    இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் கடந்த நவம்பர் 21 ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்டது. நேற்று முதல் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையே முறையான வர்த்தகத்தை ஊக்குவிக்கவும் மேம்படுத்தவும் வழிவகுக்கிறது. இதனால் இந்திய நுகர்வோருக்குத் தரமான பொருட்களை மலிவான விலையில் கிடைக்கும் என்றும், இந்தியாவில் கூடுதலாக 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    இந்திய யோகா ஆசிரியர்கள் மற்றும் சமையல் கலைஞர்கள் வருடாந்திர விசா ஒதுக்கீட்டின் மூலம் ஆஸ்திரேலியா செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 1 லட்சத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் கல்வி விசா மூலம் ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்களில் சேர முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

    இந்திய ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இருதரப்புக்கும் இடையேயான விரிவான உத்திசார் ஒத்துழைப்புக்கு முக்கியமான தருணம் இதுவாகும்.

    இந்த ஒப்பந்தம் நமது வர்த்தகம் மற்றும் பொருளாதாரப் பிணைப்பில் திறன்களை மகத்தான முறையில் அதிகரிப்பதுடன் இருதரப்பு வணிகங்களையும் வலுப்படுத்தும். இந்தியாவில் விரைவில் உங்களை வரவேற்கும் தருணத்தை எதிர்நோக்கி இருக்கிறேன். இவ்வாறு பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

    ×